டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகனை சிபிஐ கைது செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானி நிர்வகித்து வருகிறார். இந்த மோசடி வழக்கில் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.