சென்னை: தொழிலாளர் தினத்தையொட்டி, மே 1ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசே மது விற்பனைக்கென டாஸ்மாக் நிறுவனத்தை நடத்தி மூலை முடுக்கெல்லாம் மதுபான கடைகளை தொடங்கி மக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலோர் போதைக்கு அடிமையாகி வருகின்றன. தமிழ்நாட்டின் வருமானத்தில் டாஸ்மாக் மது விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அரசும், மக்களின் நலன் குறித்து கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஏராளமான டாஸ்மாக் கடைகள், மற்றும் பார்கள் உள்ளன.
இந்த மதுபான கடைகளை மூட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மாநில அரசு அதை கண்டுகொள்வது இல்லை. இந்த நிலையில், மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இது குடி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.