மும்பை

வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு பங்குச்சந்தை நிருவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  விழாவில் கலந்துக் கொள்ளக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்

மத்திய அரசு ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22 ஆம் தேதியன்று அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து அறிவித்துள்ளது.  பாஜக ஆளும் மாநிலங்களிலும் 22 ஆம் தேதி அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி,

“வரும் 22 ஆம் தேதியன்று பங்குச் சந்தை நிறுவனங்கள் அனைத்தும் காலை 9 மணிக்குப் பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும்.  வரும் 22ம் தேதி அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச் சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும்.  நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது”

என அறிவித்துள்ளது.