மும்பை

மக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில முத்த அரசியல் வாதியும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருக்கு ,முகநூலில் கொலை மிரட்டல் வந்துள்ளது.  அச்செய்தியில் “விரைவில் நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்’ என எச்சரிக்கப்பட்டிருந்தது   இன்று இது குறித்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மும்பை காவல் ஆணையரை சந்தித்துள்ளார்.

அப்போது சுப்ரியா சுலே இந்தக் கொலை மிரட்டல் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்., சரத் பவாரின் பாதுகாப்புக்கு மாநில மற்றம் மத்திய உள்துறை அமைச்சர்கள்தான் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

 கொலை மிரட்டல் குறித்து சரத் பவார் செய்தியாளர்களிடம்,

“நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க உரிமை இருக்கிறது. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த உரிமை உண்டு. இதுபோன்று அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் ஒருவர் பேசுவதை நிறுத்தி விடலாம் என சில நேரங்களில் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இது தவறான எண்ணம். காவல் துறை மீதும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்தக் கொலை மிரட்டல் குறித்து நான் அச்சம் கொள்ளவில்லை”

என்று தெரிவித்துள்ளார்,