சீரடி

பாஜகவுக்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் சாதகமாக இல்லை எனத் தேசிய வாத காங்கிரஸ் சரத்பவார் கூறி உள்ளார்.

நேற்று மகாராஷ்டிர மாநில சீரடியில் நடந்த ஒரு நிகழ்வில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார், கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார்

அவர் தனது உரையில்

“பாஜக கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது பல திட்டங்களை அறிவித்து, பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் எதையும் நிறைவேற்றாமல் அக்கட்சி மக்களை ஏமாற்றியது.

மக்கள் தற்போத இதனை உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.  விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள வேளையில் பாஜகவுக்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இல்லை.

பாஜக 543 மக்களவை தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறது., அதே வேளையில் நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்”

ன்று தெரிவித்துள்ளார்.