திருவனந்தபுரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்  எம் பி யுமான சசிதரூர், 4 -வது தடவையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.நேற்று அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியில் சசி தரூர்,

“நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியாவில் சிறப்பான வெற்றியைப் பெறுவோம், கால் பதிப்போம் என்று பா.ஜக சொல்கிறது.சந்தேகமே இல்லாமல், தென்னிந்தியாவில் கால் பதிக்க பா.ஜனதா முயலும். பிரதமர் மோடியின் பிரசாரம் அதைத்தான் உணர்த்துகிறது. 

தென்னிந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதாகச் சொல்லும் பாஜகவை உண்மையிலேயே வளர்ச்சி அடைந்துள்ள தென் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது. கேரளாவுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படி பாஜக எதுவும் செய்யவில்லை. கேரளாவுக்கு எய்ம்ஸ் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் எய்ம்ஸ் வரவில்லை. 

எதிர்க்கட்சிகள் வடக்கு-தெற்கு பிரிவினை ஏற்படுத்த முயல்வதாக பாஜக சொல்கிறதே தவிர மதம், மொழி, பிராந்திய அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த முயல்வது பாஜக தான்.மக்களுக்கு வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவைதான் முக்கிய பிரச்சினைகள் என்று கு தெரிவதால் அவர்கள் மதத்தின் அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள்” 

என்று கூறி உள்ளார்,.