ராணிப்பேட்டை: 14வயது பள்ளி மாணவியிடம் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்ட புகாரில், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ பாதிரியார் ரகுராஜ்குமார், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், பாலியல் தொடர்பான சர்ச்சைகளும், போதை பொருள் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை நிர்வகித்து வரும்  54 வயதான பாதிரியார்  ரகுராஜ்குமார் என்பவர், சர்ச்சுக்கு வரும் 14 வயது மாணவியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார். பொதுவாக கிறிஸ்தவ ஆலயங்களில் விடுமுறை தின வகுப்புகள், வேதாகம வகுப்புகள் என்ற பெயரில் நடத்தப்படுவது உண்டு. இதில்,  ஏராளமான குழந்தைகள் சென்று கிறிஸ்தவ பாடம் பயின்று வருகின்றனர்.

அதுபோல, பாதிரியார் ரகுராஜ்குமாரின், ராணிப்பேட்டை  ஏரி தெருவில் உள்ள  ஆலயத்தில் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏராளமான குழந்தைகள் வந்து படித்து வருகின்றனர். சம்பவத்தன்று,  10ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியிடம் பாதிரியில் பாலியல் அத்துமீறல் செய்து வந்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறை விசாரணை நடத்தியபோது, பாதிரியார் ரகுராஜ்குமார், கடந்த, 2022 டிசம்பரில் இருந்த அந்த சிறுமியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.  அந்த சிறுமியிடம்,  இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் பயந்துபோய் இருந்த சிறுமி, பாதிரியாரின் அத்துமீறில் அதிகரிக்கவே,  அந்த தகவலை மாணவி, சமீபத்தில் தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனால் கடும் கோபமடைந்த  மாணவியின் பெற்றோர்  ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் ரகுராஜ்குமார் மீது புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில்,  போக்சோவில் வழக்குப்பதிந்து , ரகுராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.