சென்னை: பெண் காவலரிடம் பாலியல் சேட்டை செய்த போக்குவரத்து காவல்துறையின் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்  செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரி முதல், காவல்துறை உள்பட அனைத்து துறைகளிலும் பாலியல் தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார். ஐ.பி.எஸ். வேலையே பயிரை மேய்ந்த கதையாக,  பெண் போலீஸ் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி .பி.எஸ். அதிகாரி மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. / மேலும், அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் ‘விசாகா’ கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.  மேலும்,  காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.