வாணியம்பாடி: கல்லூரி மாணவியை காதலித்து மணந்துவிட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரக்கோணம்  திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டு உள்ளது.

அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னை, அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.  திமுக இளைஞர் தணி தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், இந்த நடவடிக்கைகை எடுத்துள்ளார்.

 தெய்வசெயலுக்கு பதிலாக கவியரசு என்பவர் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக  திமுக தலைமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் (த/பெ ரத்தினம் 150/1, 172, பெரிய தெரு, காயலூர் குடியிருப்பு (அ) அரக்கோணம்), அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம. கவியரசு (த/பெ மனுவேல் 190, சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத் தெரு. காவலூர். அரக்கோணம்) என்பவர் , அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். எற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வலையில் வீழ்த்தி துன்புறுத்தி வருவதாக  கல்லுரி மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியுன் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண், அதிமுக நிர்வாகியிடம் சரணடைந்து, அவர்கள் மூலம் தனது பிரச்சினையை வெளிக்கொண்டு வந்தது. இதுதொடர்பாக அதிமுக தரப்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பேசும்பொதுளாக மாறியது.

இதையடுத்து, தெய்வசெயல்மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதுடன், திமுக கட்சி தலைமையையும், அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி..!  ராணிப்பேட்டையில் நாளை அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!