திருவனந்தபுரம்

சீரியல் நடிகை உள்ளிட்ட இருவர் ஒரு முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம்  மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வில் உள்ளார். வாடகைக்கு வீடு தேடிக்கொண்டு இருந்தபோது பத்தனம் திட்டா மலையாளப்புழா பகுதியைச் சேர்ந்த தொடர் நடிகை நித்யா சசி,உடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

வாடகை வீடு தொடர்பாக முதியவர் நித்யாவை சந்தித்தார். முதியவரை வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறி ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். அவரது உறவினர் பரவூர் கலைக்கோடு பகுதியைச் சேர்ந்த பினுவும்  அங்கு வந்து உள்ளார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து முதியவரை ஆடையை கழற்றுமாறு மிரட்டி நிர்வாணமாக இருந்த நித்யாவுடன் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  இருவரும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ரூ.25 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.

முதியவர் ரூ.11 லட்சம் கொடுத்து உள்ளார்., நித்யாவும்,பினுவும் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். கடந்த 18ஆம் தேதி முதியவர் பரவூர் காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளார். அவர் காவல்துறையினர் ஆலோசனைப்படி மீதிப் பணத்தைத் தருவதாகக் கூறி நித்யாவையும், பினுவையும் வீட்டிற்கு அழைத்து உள்ளார். வீட்டுக்கு வந்த  நித்யாவையும், பினுவையும் காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.