திருமலை:
திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் திருமலை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளை முதல் 15 வரை தொடர் விடுமுறை காரணமாக, திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது. எனவே, தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தற்போதைக்கு திருமலைக்கு வர வேண்டாம்’ என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.