டெல்லி:  பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்கள பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் 1ம் தேதி தொடங்கின. இந் நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்டார்.