சென்னை

மிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் என அறிவித்துள்ளார்.

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ,

“காங்கிரஸ் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி ஆகும். நாங்கல் தோழமையோடு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.  கடந்த 2014 ஆம் வருடம் பேச்சுவார்த்தை உடன்படாததால் தனியாகப் போட்டியிட்டோம்.

காங்கிரஸில் உள்ளோர் எந்த காலத்திலும் யாருக்காகவும் சீட்டுக்காக ஏங்கியதில்லை. நாங்கள் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம். எங்கள் கட்சித் தலைமைதான் நாங்கள் தனியாகப் போட்டியிட வேண்டுமா என்பதை முடிவுசெய்யும்.

காங்கிரசும் தி.மு.க.வும் உண்மையான தோழமையுடன் இருக்கிறது. எங்கள் தலைவர் ராகுல் காந்தியும் திமுக தலைவரும் அண்ணன், தம்பி போலப் பழகி வருகின்றனர்.

தற்போது தி.மு.க – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது. நாங்கள் தி.மு.க. உடன் பேசிக்கொண்டு உள்ளோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.”

என்று கூறினார்.