ஸ்ரீநகர்

ரும் குடியரசு தினத்தன்று ஒரு பெண் மனித குண்டாகி தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என வந்த எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

உளவுத் துறை காஷ்மீரை சேராத பெண் ஒருவர் மனித குண்டாக மாறி தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளதாக  எச்சரிக்கை விடுத்துள்ளது.    காஷ்மிரில் உள்ள அனைத்து மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் பாதுகாப்பு முகாம் களுக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது.    குடியரசு தின அணிவகுப்பின் போது விழா நடைபெறும் பகுதியிலே அல்லது அந்த பகுதிக்கு மிக அருகிலோ இந்த தாக்குதல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

சுமார் 18 வயது மதிக்கத் தக்க காஷ்மீர் மாநில வாசி இல்லாத ஒரு பெண் இது போல மனித குண்டாக தற்கொலை தாக்குதல் நடத்த உள்ளதாக விடுவிக்கப்பட்ட எச்சரிக்கையினால்  பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.    காவல்துறையினர்,  ராணுவத்தினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.      தவிர அனைத்து ராணுவ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.