சென்னை:
விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பத்டுகிறது.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது.

அரையாண்டு தேர்வு முடிந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.