னூஜ், உ. பி.

த்திரப் பிரதேசத்தில் சீருடைக்குஅளவு எடுப்பதாகக் கூறி எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்திய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் கனூஜில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அவரது வகுப்பு ஆசிரியர் சீருடைக்கு அளவு எடுக்க அழைத்துள்ளார்.    ஆனால் ஆசிரியர் அந்தப் பெண்ணை வற்புறுத்தி அளவு எடுக்க அழைத்துச் சென்றுள்ளார்.   அளவு எடுப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை ஒவ்வொரு உடைகளாக கழற்றச் சொல்லி நிவாணம் ஆகி உள்ளார்.

அந்தப் பெண் மிகவும் அழவே,  ஆசிரியர் அந்தப் பெண்ணை இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என எச்சரித்து அனுப்பி விட்டர்.   அந்தப் பெண் அவருடைய தாயாரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார்.    அதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் மற்ற மாணவியரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.   அப்போது அந்தப் பெண்ணிடம் ஆசிரியர் அப்படி நடந்தது உண்மை எனக் கண்டறிந்துள்ளார்.   அந்த ஆசிரியர் பல மாணவிகளிடம் பல்வேறு விதமான பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.   தற்போது ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.