டில்லி

மலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியைக் கைது செய்தனர்.

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது.  மேலும் உயர்நீதிமன்றமும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

விசாரணையில் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் 12- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி, உத்தரவிட்டார்.

அங்கித் திவாரி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவருடைய ஜாமின் மனுவை வரும் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ளது.