டில்லி

உச்சநீதிமன்ரம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.  அந்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர். பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம்  அந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்ததால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் பாண்டே என்னும் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படாத நிலையில் இந்த மனு, சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்த முயல்வதாக இருக்கிறது என்று கூறி, தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.