புதுடெல்லி:
16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களையும் நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில் பின்வரும் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிஷோர் சந்திரகாந்த் சாந்த், வால்மீகி மெனேசஸ். எஸ்.ஏ., கமல் ரஷ்மி கட்டா, ஷர்மிளா உத்தம்ராவ் தேஷ்முக், அருண் ராம்நாத் பெட்னேகர், சந்தீப் விஷ்ணுபந்த் மார்னே, கௌரி வினோத் கோட்சே, ராஜேஷ் சாந்தாராம் பாட்டீல், ஆரிஃப் சலே டாக்டர் மற்றும் சோமசேகர் சுந்தரேசன்.

மற்றொரு அறிக்கையில், “பிப்ரவரி 16, 2022 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட வழக்கறிஞர்களை நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது: நிடுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், மற்றும் ஆர். ஜான் சத்யன்.

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியான நீதிபதி அஹந்தம் பிமோல் சிங்கை அந்த உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.