கொல்கத்தா:
மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள மேற்கிந்தியதீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே புவனேஷ் குமார், மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க வீரர் பிரண்டன் கிங்கை 4 ரன்களில் வெளியேற்றினார். இதையடுத்து, கைல் மேயர்ஸுடன் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரான் அதிரடி காட்டினர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

கைல் மேயர்ஸ் 31 ரன்களில் சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி சிறிது தடுமாற்றம் கண்டது. எனினும், நிகோலஸ் பூரன் (61 ரன்கள்) களத்தில் நின்றதால் மேற்கிந்திய தீவுகள் அணி சவாலான இலக்கை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157- ரன்களை மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்தது. இதன் மூலம் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பந்து வீச்சை பொருத்தவரை இந்திய அணியில் ரவி பிஷோனி, ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றி உதவினர்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போடி வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.