பெங்களுரூ:
காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா என்ற மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சிலர் சாவர்க்கர் புகை படங்களை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலங்களில் திப்பு சுல்தானின் படம் ஒட்டப்படும் என காங்கிரஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.