சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் 14ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிஜிட்டல் வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ’அரண்மனை 3’ படத்தில் தென்னிந்திய மொழிகளின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஜீ5 நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.