பெங்களூரு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ம் தேதி 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்க, தற்போது விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிட் 19 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கை அடிப்படையில் சசிகலாவின் கொரோனா தொற்று சிகிச்சை இன்று மாலையுடன் முடிகிறது. அதன்படி அவர் நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடனடயாக பெங்களூரு திரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. பெங்களூரு – ஓசூர் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரும் 5ம் தேதி வரை தங்கி முழுமையாக ஓய்வு எடுத்தபின் பிப்ரவரி 5ம் தேதி சென்னை செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.