சென்னை:
திமுக சசிகலா அணி சார்பாக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. இவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
ஆளுநர் மாளிகை விழா மண்டபத்தில் நடந்தஇந்த பதவியேற்பு விழாவுக்கு, சசிகலா குடும்பத்தினர் வருகைபுரிந்திருந்தனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் அவரது மகன் விஜய் ஆகியோரும், அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரனும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

முதல்வராக பதவியேற்ற எடப்பாடி முதல், அனைத்து அமைச்சர்களும் இவர்களுக்கு பணிவுடன் வணக்கம் சொல்லிய பிறகே பதவிப்பிரமாணம் எடுக்க மேடைக்குச் சென்றார்கள்.