ரக்கோணம்

ரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த உத்தரகாண்ட் மாஇல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் தண்டவாள இணைப்பு போல்டுகள் கழற்றப்பட்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு செய்யப்பட்டிருந்த ரயிலை கவிழ்க்கும் முயலும் இந்த சதிச்செயலை உரிய நேரத்தில் ரெயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து கற்கள், போல்டுகளை அகற்றினார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக புதுச்சேரி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  நேற்று இந்நிலையில், அரக்கோணத்தில் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியாரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு ரெயில் தண்டவாளத்தின்மீது கற்களை வைத்தது உத்தரகாண்டை சேர்ந்த ஹோம் என்ற சாமியார் என்பது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட சாமியாரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.