டில்லி

ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர்.பதவி பறிக்கப்பட்டது. கடந்த 4-ந் தேதி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

எனவே காங்கிரஸ் மற்றும் கூட்டணி தலைவர்கள் ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து நாடாளுமன்ற உறுப்பினர். பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி   வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் ,

“ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர். பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேகம், சுப்ரிம் கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு அதை ரத்து செய்வதில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்த 3 நாட்கள் ஆகிவிட்டது,

ஆனாலும் சபாநாயகர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்.பதவி நீக்கத்தை ரத்து செய்யவில்லை.

மத்திய அரசு ராகுல் காந்திக்குப் பயப்படுகிறது. எனவே அவரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமல் உள்ளது. எங்களின் யூகம் குறித்து நாளை எதிர்க்கட்சிகள் சந்தித்துப் பேச உள்ளோம்”.

என்று கூறி உள்ளார்.