இந்த மாதம் 19ஆம் தேதி அன்று சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.  அதற்கான மேஷ ராசி பலன்கள் இதோ:

மேஷ ராசி அன்பர்களுக்கு 19.12.17 முதல் 26.12.20 வரை 9ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்துள்ளார்.   புதிய வியூகங்களில் சாதனை, நீண்டகால தடை ஏற்பட்ட வேலைகளை முடிப்பது, குடும்பத்தில் இழந்த செல்வாக்கு மீள்வது ஆகிய பலன்களை சனி பகவான் அளிப்பார்.   வீட்டை விரிவு படுத்துதல், வராது என எண்ணிய கடன்கள் திரும்ப வருவது, நோய் பாதிப்புகளில் இருந்து நிவாரணம்,  வழக்குகள் சாதகமாக முடிவது, அடகு வைத்த நகைகளை மீட்பது ஆகியவையும் இனி உங்களுக்கு சாத்தியம் ஆகும்.  தந்தையின் உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை.

இந்த சனிப்பெயர்ச்சி கால கட்டத்தில் உங்களுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்குவார்.  வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபத்தையும், நிலுவைத் தொகைகள் வசூலையும் அளிப்பார்.  புதிய ஒப்பந்தங்களுக்கு வாய்ப்பு உண்டு.  வங்கிக் கடன் சுமை தீரும்.   கெமிக்கல், ஓட்டல் மற்றும் விடுதிகள், இரும்பு மற்றும் எண்ணெய் வகைகளில் வர்த்தகம் செய்வது லாபத்தை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வந்து சேரும்.  உங்களிடம் பிரச்னை செய்த சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார்கள்.   வெளிநாட்டில் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் யோகமும் உண்டு.

நட்சத்திர சஞ்சார கால பலன்கள்

மூல நட்சத்திரத்தில் 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார்.  இந்த தினங்களில் பெரிய பதவியில் உள்ளவர்களின் நட்பை அடைந்து வெளிவட்டார மதிப்பு கூடும்.  வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு.  அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.  இவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், மறைமுக எதிர்ப்பு ஏற்பட பெரிதும் வாய்ப்புண்டு.

பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரையிலான தேதிகளில் சனி சஞ்சாரம் செய்கிறார்.  இந்தக் காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவதும் இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவதும் நல்ல நன்மையத் தரும்.   திருமணம் தடைபட்டோருக்கு திருமணம் நடக்கும்.  வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்புடன் புது வேலை கிடைக்க வாய்ப்புண்டு.  பரணி நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு சளி, காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

உத்திராடம் நடத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி பகவான் சஞ்சரிக்கிறார்.  இந்த கால கட்டத்தில் நல்லது நடப்பது சற்றே கடினம்.  திருமணம், பிள்ளைகளின் கல்வி, உத்தியோக ஆகியவை தாமகதமாக வாய்ப்புள்ளது.  பூர்வீக சொத்து பிரச்னை உள்ளவர்கள் சுமுகத் தீர்வு காண்பது நன்மை பயக்கும்.  கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபத்தால் துன்பம் நேரிடலாம்.  கோபத்தை முழுவதுமாக தவிர்க்கவும்.

வக்கிரச் சனி பலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் வக்கிரமாக செல்கிறார்.  இந்த நேரத்தில் எந்த வேலையானாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.  மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது.  வழக்கு தீர்ப்பு தள்ளிப் போகக்கூடும்.  உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.

பூராட நட்சத்திரத்தில் 10.5.19 முதல் 11.8.19 வரை, 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை சனிபகவான் வக்கிர சஞ்சாரத்தில் உள்ளார்.  கணவன் மனைவி இடையில் கருத்து வேறுபாடுகள், உறவினர்களுடன் மோதல் ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

உத்திராடம் நட்சத்திர முதல் பாதத்தில் 2.5.20 முதல் 16.7.20 வரை சனிபகவானின் வக்கிர சஞ்சாரம் இருப்பதால் பல புதிய வெற்றிச் சிந்தனைகள், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்க முடியும்.  பூர்விக சொத்து பிரச்னை முடிவுக்கு வருவது, மகளுக்கு நல்ல வரன் அமைவது, அரசால் அனுகூலம் ஆகியவகளுக்கு வாய்ப்புண்டு.

பரிகாரம் : ஏகாதசி அன்று ராமானுநஜரையும் ஸ்ரீபெரும்புதூர் பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்