சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் குறித்து கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் 1265.19 சதுர கி.மீ. கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக சேலம் மாநகரம் உருவெடுத்துள்ளது.

சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் சேலம் மாநகராட்சி, தாரமங்கலம் & இடங்கனசாலை ஆகிய 2 பேரூராட்சிகள், 8 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 228 கிராமங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து சேலம், ஓமலூர், சங்கரி மற்றும் வாழப்பாடி ஆகிய நாலு தாலுகாக்களை உள்ளடக்கியதாக சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (SUDA) உருவெடுத்துள்ளது.

SUDA-வின் கீழ் வரும் முக்கிய டவுன் பஞ்சாயத்துகள் ஓமலூர், கருப்பூர், இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் மற்றும் காடையாம்பட்டி. தவிர, நாகரமலை RF, ஜருகமலை RF, குடமலை ஆர்.எஃப், கஞ்சமலை RF, குண்டுக்கல் RF உள்ளிட்ட சில காப்புக் காடுகளும் SUDA-வின் கீழ் வருகின்றன.

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவைக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நகர்ப்புற திட்டமிடல் பகுதியாக சேலம் உருவாகி இருப்பது அந்தப் பகுதியில் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட வழிவகுக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர்.