சென்னை:

பிஎல் போட்டியில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தாக சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக, ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க தமிழக அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால், ஐபிஎல் நிர்வாகம் அதை ஏற்க மறுத்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே கடந்த 10ந்தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது.

அன்று ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், மைதானத்தில் நடைபெற்ற செருப்பு வீச்சு போன்ற வற்றால், ஐபிஎல் போட்டி சென்னையில் இருந்து மாற்ற முடிவு  செய்யப்பட்டுளள்து.

இந்நிலையில், சென்னையில்  தொடர்ந்து விளையாட முடியாமல் போனது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில்,  சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்..

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.