சியோல்: 
ப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வெளியான செய்தியில்,  தென் கொரியா ராணுவம் சார்பில்,  கிழக்கு கடல் பிராந்திய பாதுகாப்பு பயிற்சி என்று  அழைக்கப்படும் கடல்சார் பயிற்சி நாளை  ஜப்பானில் தாகேஷிமா எனப்படும் டோக்டோ தீவுகளுக்கு அருகில் நடத்தப்பட உள்ளது.
இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகை, கடந்த 1986 முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த பயிற்சியில்  கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் கடல் ரோந்து விமானங்கள் பங்கேற்கும்.
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக எந்த தரையிறங்கும் பயிற்சியும் மேற்கொள்ளப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.