வாஷிங்டன்:

 

ஷியா, சீனாவே பயங்கரவாதத்தை விட அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் கூறிஉள்ளது.

பெண்டகன் என அழைக்கப்படும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமை தொடர்பான வியூக ஆவணத்தை வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணத்தில் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போட்டியிடுவதற்கு மேலாக சீனா மற்றும் ரஷியாவுடன் போட்டியிடுவதற்கு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கர்கள் மத்தியில் இது குறித்து ஆழ்ந்த கவலை இருப்பதை அமெரிக்காவின் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தலானது வெளிக்காட்டியது.

உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா கடந்த இருபது ஆண்டுகளாக தன்னை அதிதீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது.

தற்போது பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பாதுகாப்புத்துறையின் வியூகம் மற்றும் படை மேம்பாட்டு பிரிவின் உதவி செயலாளர் எல்பிரிட்ஜ் கால்பி “அமெரிக்க பாதுகாப்பு துறை ரஷியா மற்றும் சீனாவின் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என பெண்டகன் செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டு உள்ளார்.  மேலும் அமெரிக்கா பயங்கரவாத விவகாரத்தில் செலுத்தும் கவனமும் குறையாது எனவும் இது மிக முக்கியமான எச்சரிக்கையாகும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.  அதே நேரத்தில் ரஷியா மற்றும் சீனாவைவிட அமெரிக்க ராணுவம் நவீனமானது என்று குறிப்பிட்ட அவர் வியூகம் தொடர்பான விரிவான விளக்கத்தை அளிக்க மறுத்துவிட்டார்.