புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசியக் கொடியை ட்விட்டரில் Profile Picture-ஆக மாற்றியது.

சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் படியும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்கவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தனது Profile Picture-ஐ ஏன் மாற்றவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசியக் கொடியை ட்விட்டரில் Profile Picture-ஆக மாற்றியது.