நாக்பூர்: அயோத்தி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக அமையும் என்று ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) எதிர்பார்க்கிறது என்று அதன் சரகர்யாவா சுரேஷ் ஜோஷி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணையை முடித்துவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து தடைகளும் போக வேண்டும் என்பது நீண்ட காலமாக எங்கள் நிலைப்பாடு. நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து சட்டப்பூர்வ பிரச்சினை இருந்தது. இப்போது, ​​ நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், ஒரு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையைப் பொறுத்து எங்கள் அடுத்த நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவெடுப்போம். நீதிமன்றத் தீர்ப்பு இந்து சமுதாயத்திற்கு ஆதரவாக வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.

மத்தியஸ்தம் மூலம் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது குறித்து பேசுகையில், மத்தியஸ்தம் ஒரு முடிவைக் கொடுத்திருந்தால், நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அவசியமிருந்திருக்காது. மத்தியஸ்தம் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றுதான் நாங்கள் இத்தகைய நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம்.

மத்தியஸ்தம் வெற்றி பெற்றிருந்தால் எங்களுக்கு நன்றாக இருந்திருக்கும். இப்போது, நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தீர்ப்பு அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று திரு.ஜோஷி கூறினார்.

குடிமக்களின் தேசிய பதிவேட்டில் (என்.ஆர்.சி) ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ​​திரு.ஜோஷி, ஒவ்வொரு நாடும் என்.ஆர்.சி முறையைக் கொண்டுவர வேண்டும். மக்கள் தங்கள் இந்திய தேசியத்தின அடிப்படையில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றார்.