சென்னை: தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 255 கி.மீ நான்கு வழிச்சாலைகள் ரூ.2123 கோடியில் தரம் உயர்த்தப்படும். நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 96 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.412 கோடியில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளை பலப்படுத்தும் பணிக்கு ரூ.750 கோடியிலும், பாலங்கள் கட்டும் பணிக்கு ரூ.117 கோடியிலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வகையிலும், மழைநீர் வடிந்து செல்ல ஏதுவான வகையிலும் திட்டமிட்டு சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.