சென்னை

ரு மருந்தக ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 743 கோடி தவறாக டெபாசிட் செய்யப்பட்டுள்ள விவகார்ம கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருந்தக ஊழியராகப் பணி புரியும் முகமது இத்ரிஸ் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் ர் நேற்று தனது நண்பருக்கு இவர் 2 ஆயிரம் ரூபாயை கோட்டக வங்கிக்கணக்கின் மூலம் மாற்றியுள்ளார். இவர் பணத்தை மாற்றியதும் வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியில், அவரது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் உள்ளதாக இருந்துள்ளது.

முகமது இத்ரிஸ் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து விவரத்தைக் கூறியுள்ளார். அவர்கள் முகமது இத்ரிஸின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். இது குறித்து அவர் விளக்கம் கேட்டும் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று அவர் கூறினார். வங்கிக் கணக்கை முடக்கியது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாயும், நேற்று தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது வங்கிக் கணக்கில் 756 கோடி ரூபாயும் வரவு வைக்கப்பட்டது. இதைப் போல் சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் அதிக தொகை வரவு வைக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.