டில்லி:

ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக கூறி, மோடி அரசு, கடந்த  2016ம் ஆண்டு என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானதால், புதிய ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் ரிசர்வ வங்கி வெளியிட்டது.

உயர்மதிப்பு ரூபாய் தடை காரணமாக கருப்பு பணம் ஒழிவதற்கு பதிலாக மக்களின் வாழ்வாதாரமே கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் பணம் கிடைக்காமல் வங்கி வாசல்களிலும், ஏடிஎம் அறையின் முன்பு காத்திருந்தும்

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்க ளில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.2000 நோட்டுக்களை நீக்கிய பின்னர், ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுக்களை நீக்கும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. அதிக மதிப்புடைய நோட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, குறைவான மதிப்புடைய நோட்டுக்களின் புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே புழக்கத்தை குறைக்க ரூ .2,000 அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.