பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலா மற்றும் இளவரசி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்தபோது. சிறை அதிகாரிகளுக்கு  ரூ.2கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தொடர்பான வழக்கில், சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

சசிகலா, இளவரசியை கைது செய்து, அக்டோபர் 5ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பரப்பன அக்ரஹாரா சிறை சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு கால தண்டனை அனுபவித்து விடுதலையானா சசிகலா, இளவரசி மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரப்பன அக்ரஹார  சிறையில் இருந்த போது சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்துவிட்டு, சொகுசாக வாழ்ந்து வந்தது, அங்குள்ள சிறை அதிபராக ரூபாவால் வெளிச்சத்துக்கு வந்தது.   சிறையில் இருந்து, சசிகலா  திருட்டுத்தனமாக வெளியே ஷாப்பிங் சென்ற வீடியோவும்  சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணையை நடத்தாமலும், குற்றப்பத்திரி கையை தாக்கல் செய்யாமலும் போலீசார் தாமதம் செய்து வருவதால், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இதில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி கடந்த (2023)  ஜனவரி மாதம் 7ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளராக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி வழங்கியது.

சசிகலாவிற்கு சம்மன் இந்த நிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு  24வது பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்,  சசிகலா, இளவரசி, கிருஷ்ணகுமார், அனிதா, கஜராஜ மகனுார் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், சசிகலா, இளவரசி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, சசிகலா, இளவரசியை கைது செய்து, அக்டோபர் 5ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.