மதுரை:  அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி,  ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை​யில் ரூ.100 கோடி மோசடியில் ஈடு​பட்​ட​தாக அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனின் முன்​னாள் உதவி​யாளர் ஜெய் பாலாஜி மற்​றும் அவரது மனைவி கைது செய்​யப்​பட்​டனர். மதுரை தபால்​தந்தி நகர் அரு​கில் உள்ள கலைநகரில் வசிப்​பவர் ஜெய் பாலாஜி (42). அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக இருந்​தது முதல் அவரிடம் உதவி​யாள​ராக (பிஏ) இருந்​து வந்தவர்.

ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி​யும் காதலித்து திரு​மணம் செய்​தவர்​கள். கலா​வதி பட்​டயக் கணக்​காள​ராக உள்​ளார். நிதி அமைச்​ச​ராக பழனிவேல் தியாக​ராஜன் பொறுப்​பேற்​றதும், செல்​வாக்கு மிக்க நபராக ஜெய்பாலாஜி வலம் வந்​தார். அமைச்​சரின் பெயரை தவறாக பயன்படுத்தி மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல வேலைகளை கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார்.  இப்படி கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை  தனது பெயரிலும், மனைவி மற்​றும் பினாமி பெயர்​களில் முதலீடு செய்​தார்.

இதற்கிடையில் பிடிஆர் உதவியாளர் ஜெய் பாலாஜி​ மீது அடுக்கடுக்கான புகார்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வந்தது.   இதை தொடர்ந்து அமைச்​சர் அவரை எச்​சரித்​து, பணி​யில் இருந்து நீக்கினார்.

இந்த சூழலில்,  மதுரை​யில் உள்ள பிரபல கட்​டு​மான நிறுவன உரிமை​யாளரிடம் பல்​வேறு வேலைகளைச் செய்து தரு​வ​தாகக் பணம் பெற்றது.  மாநக​ராட்​சி​யில் சில வேலைகளைச் செய்து கொடுக்க ரூ.50 லட்​சம் வரை பெற்​றுள்​ளது தெரிய வந்தது.

அதுபோல, மருதம் ரியல் எஸ்​டேட் பெயரில், தவணை முறை​யில் பணம் செலுத்​தி​னால் வீட்டு மனை வழங்​கு​வ​தாக கணவன், மனைவி இரு​வரும் பொது​மக்​களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்​றி​யுள்​ளதாகவும் புகார்கள் வந்தது.

மேலும் பலரிடம் அமைச்​சரின் பெயரைக் குறிப்​பிட்​டும், ரியல் எஸ்​டேட் பெயரிலும் ரூ.100 கோடி வரை மோசடி செய்​துள்​ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி இருவரும் சேர்ந்து சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடாக பணம் சம்பாதித்தது  உறுதி செய்தனர்.  இதையடுத்து, அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, ஜெய் பாலாஜி​யும், கலா​வ​தி மற்​றும் பினாமிகள் பெயர்​களில் உள்ள அசை​யும், அசையா சொத்​துகளின் ஆவணங்​களைச் சேகரித்து வருவதாகவுமை,  இந்த சொத்​துகளைப் பறி​முதல் செய்​து, பாதிக்​கப்​பட்​டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]