சென்னை

மைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டிவீட் வெளியிட்ட சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கும் சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், தனக்கு மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்வதற்குச் சவுக்கு சங்கருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.  ஆயினும் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் டிவிட்டரில் அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதற்காகச் சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

இதுவரை தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, இனி கருத்துக்களைப் பதிவிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கருத்து தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார்.