ண்டன்

ந்திய வீரர் ரோகித் அயல்நாட்டில் அடித்த முதல் செஞ்சுரியை ஒட்டி 7 வருடத்துக்கு முன்பு தோனி வெளியிட்ட டிவீட்ட் வைரால்கி வருகிறது

லண்டனில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 ஆம் போட்டி நடந்து வருகிறது.   இந்த நான்காம் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்கள் மற்றும் இங்கிலாந்து 290 ரன்கள் எடுத்தன.  முதல் இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்சில் அருமையாக விளையாடி வருகிறது.

99 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அற்புதமான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரோஹித்துடன் இணைந்த சேத்தேஷ்வர் புஜாரா துரிதமாக ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார். இதனால், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித். இந்திய அணியும் முன்னிலைப் பெற்றது. புஜாரா அரைசதத்தை நெருங்க ரோஹித் சதத்தை நெருங்கினார்.

இதுவரை 94 ரன்கள் எடுத்திருந்தபோது மொயின் அலி சுழலில் சிக்ஸரைப் பறக்கவிட்ட ரோஹித் சர்மா அந்நிய மண்ணில் தனது முதல் சதத்தை எட்டினார். இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த 7 சதங்களும் இந்திய மண்ணில் அடித்தவை.

ரோகித் வெளிநாட்டில் தனது முதல் செஞ்சுரியை அடித்த நிலையில் சுமார் 7 வருடங்களுக்கு முன்பு தோனி பதிந்த டிவிட் வைரால்கி வருகிறது.   கடந்த 204 ஆம் வருடம் அவர் தனது டிவிட்டரில் “ரோகித் பேட்டிங் அருமையாக உள்ளது.  இதுதான் அனைவருக்குமான ரோகித் முழுத்திறமை,   அவருடைய தரமான ஆட்டத்தை ரசிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.