மும்பை: இந்திய வீரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காத ஒரே இடம் எதுவென்றால் அது வங்கதேசம்தான் என்று தனது அனுபவத்தைக் கூறியுள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா.
முகநூலில் நடந்த ஒரு நேரடி நிகழ்ச்சியில், வங்கதேச துவக்க வீரர் தமிம் இக்பாலுடன் ரோகித் ஷர்மாவும் பங்கேற்றார். அப்போது இதைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளிலும் உணர்ச்சிவயப்பட்ட ரசிகர்களுக்குப் பஞ்சமில்லை. இதனால், நாங்கள் தவறிழைக்கும்போது பெறுகின்ற விமர்சனங்களுக்கு குறைவிருப்பதில்லை. இதே நிலைதான் வங்கதேசத்திலும்.
வங்கதேசத்தில் நாங்கள் விளையாடுகையில், ஒட்டுமொத்த வீரர்களின் ஆதரவும் அந்த அணிக்குத்தான் இருக்கும். இது உண்மையில் ஒரு ஆச்சர்ய விஷயம். எங்களுக்கு ரசிகர் ஆதரவு கிடைக்காத ஒரே இடம் எதுவென்றால் அது வங்கதேசம்தான்.
அந்த அணி தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த உலகக்கோப்பைத் தொடரில், அந்த அணியின் செயல்பாடே அதற்கு சாட்சி” என்றார்.