டெல்லி: கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் உச்சமடைந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல 469 உயரிழந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இதுவரை, சுமார் 6 கோடியே 88 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்புக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காங்கிரஸ் பொது  செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.