சென்னை: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும், மேலும்,  8,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதுடன், 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.  நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டிலும் 20 மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் பூஷன் மாநிலங்களுக்கு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்திய நிலையில், இன்று  அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கொரோனா  நிலவரம் குறித்து இன்று காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார். குறிப்பாக, தடுப்பூசி செயல்பாடுகள், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் தடுப்பூசி செலுத்தாக 6% நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது தவிர காசநோய், கண்புரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.