திருப்பதி

திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் கூடுதல் லட்டு வழங்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதி கோவிலில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் தரிசனத்துக்குப் பல மணி நேரம் காத்திருக்க நேருகிறது.   இவ்வாறு தரிசனம் செய்ய வருவோருக்கு ஒரு இலவச லட்டு வழங்கப்படுகிறது.

கூடுதல் லட்டு தேவைப்படுவோர் கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்டர்களில் ரூ.50 வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது பக்தர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளதால் கூடுதல் லட்டு வழங்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலவச லட்டு தவிரக் கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு ரூ.50 வீதம் கூடுதலாகச் செலுத்தி 2 லட்டுகள் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   எனவே தினசரி 3 லட்சத்துக்கும் அதிகமான லட்டுகள் தயாரானாலும் பக்தர்களுக்குக் கேட்கும் அளவுக்கு லட்டுகள் கிடைப்பதில்லை.