ஸ்ரீநகர்

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் ஜிஜ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் பாதுகாப்புப் படையினருடன் நடந்த போரில் சுட்டுக் கொல்லப்பட்டார்/

காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடிக்க கடுமையாகப்  போராடி வருகின்றனர்.  அவ்வகையில் அனந்தநாக் மாவட்டம், கரன் வெரிநாக் பகுதியில் உள்ள கவாஸ் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்தாக கிடைத்த தகவலின் பேரில் இந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் மாலையில் சுற்றி வளைத்தனர்.

இரு தரப்பினருக்கும் தொடர்ந்து பலமணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.  இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.  கிராமவாசி ஒருவரும 3 ராணுவ வீரர்களும் காயம் அடைந்துள்ளனர்.    இந்த போரில் கொல்லப்பட்டவர், ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் நிசார் கண்டே என அடையாளம் காணப்பட்டார். அனந்தநாக் மாவட்டம், தூரு கிராமத்தைச் சேர்ந்த நிசார் கண்டே கடந்த 2018 அக்டோபரில் தீவிரவாதப் பாதைக்கு மாறியுள்ளார்.

இந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். போரில் காயம் அடைந்த 4 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சம்பவ இடத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.