சென்னை: சென்னை உள்பட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தும்,  ஆதி திராவிடர்களுக்கு 85, பழங்குடியினருக்கு 3 பொதுப் பிரிவு பெண்களுக்கு 200 பேரூராட்சிகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் சாதி ரிதீயிலாகவும், பெண்களுக்கான வார்டுகள் குறித்து  ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பட்டியலினப் பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர், தேவர்சோலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி பட்டியலினத்தைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, கரூர் மாநகராட்சி, சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி,மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின பொதுப் பிரிவில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் பெண்களுக்கு, தேசூர் (திருவண்ணாமலை), மருதூர் (கரூர்), வாலாஜாபாத் (காஞ்சி), தலைஞாயிறு (நாகை), கீளாம்பாடி (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), திருப்பணந்தாள் (தஞ்சை), புதுப்பாளையம் (திருவண்ணாமலை), கீழ்வேளூர் (நாகை), இடைக்கழிநாடு (செங்கல்பட்டு), கணியூர் (திருப்பூர்), ஓவேலி (நீலகிரி), சின்னக்கம்பாளையம் (திருப்பூர்), கீழ்குந்தா (நீலகிரி), புதுப்பட்டி (தேனி), பூலாம்பாடி (பெரம்பலூர்), ஆயக்குடி (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), புலியூர்(கரூர்), பள்ளிகொண்டா (வேலூர்), முதூர் (திருப்பூர்), இலஞ்சி (தென்காசி), மீஞ்சூர் (திருவள்ளூர்), அச்சிறுப்பாக்கம் (செங்கல்பட்டு), சுந்தரபாண்டியாபுரம் (தென்காசி), உதயேந்திரம்(திருப்பத்தூர்), குளத்துப்பாளையம் (திருப்பூர்), வேடபட்டி(கோவை), தேவதானப்பட்டி (தேனி), மெலட்டூர் (தஞ்சை), நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்), பேளூர் (சேலம்), காட்டுப்புதூர் (திருச்சி), கொரடாச்சேரி (திருவாரூர்), தொட்டியம் (திருச்சி), விரகனூர் (சேலம்), பெத்தநாயக்கன்பாளையம் (சேலம்), அடிக்கரட்டி (நீலகிரி), மரக்காணம் (விழுப்புரம்), ஹுலிகள் (நீலகிரி), பாலசமுத்திரம் (திண்டுக்கல்), வீரபாண்டி (தேனி) ஆகிய 43 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கு, செந்தாரைப்பட்டி(சேலம்), நடுவட்டம் (நீலகிரி), கோம்பை (தேனி), அரும்பாவூர் (பெரம்பலூர்), பி.மல்லாபுரம் (தர்மபுரி), ருத்ராவதி (திருப்பூர்), அனந்தபுரம் (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), எஸ்.கொடிக்குளம் (விருதுநகர்), பேரளம் (திருவாரூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), கங்குவார்பட்டி (தேனி), ஆர்.புதுப்பட்டி (நாமக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தென்கரை (தேனி), கீரனூர் (திண்டுக்கல்), தியாகத்துருவம் (கள்ளக்குறிச்சி), திருவேங்கடம் (தென்காசி), தேரூர் (கன்னியாகுமரி), வேப்பத்தூர் (தஞ்சை), மணல்மேடு (மயிலாடுதுறை), எஸ்.புதூர் (தென்காசி), கருங்குழி (செங்கல்பட்டு), சீராப்பள்ளி (நாமக்கல்), தாமரைக்குளம் (தேனி), ஆய்குடி (தென்காசி), கொங்கனாபுரம் (சேலம்), காளப்பநாயக்கன்பட்டி (நாமக்கல்), அகரம் (திண்டுக்கல்), கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), பி.மீனாட்சிபுரம்(தேனி), சித்தையன்கோட்டை (திண்டுக்கல்), படைவீடு (நாமக்கல்), பட்டினம்(நாமக்கல்), கடத்தூர்(தர்மபுரி), ஹைவேவிஸ்(தேனி), ஆதனூர்(நாமக்கல்), கருப்பூர்(சேலம்), நாமகிரிப்பேட்டை(நாமக்கல்), கடையம்பட்டி(சேலம்), மாமல்லபுரம்(செங்கல்பட்டு) ஆகிய 42 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு பெண்களுக்கு ஆரணி(திருவள்ளூர்), நாரவாரிகுப்பம்(திருவள்ளூர்) உள்பட 200 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற பேரூராட்சிகள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.