டில்லி,

ந்தியாவின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம்  உயரம் குறைந்துள்ளதாக என ஆய்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நேபாள நிகழ்ந்த்  பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகர உயரம் குறைந்துள்ளதா என இந்திய அரசு மீண்டும் அளவு எடுக்க திட்டமிட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த 2015ல் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அப்போது மலை பகுதிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இந்திய வடஎல்லையில் உள்ள இமயமலையை ஒட்டியே நேபாளம் உள்ளது.

நேபாள பூகம்பத்தின் காரணமாக  உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய திட்மிடப்பட்டுள்ளதாக  இந்திய சர்வேயர் சுப்பா ராவ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது,

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்  1855 ஆண்டு அளக்கப்பட்டது. அதன்  சரியான அளவு இந்தியாவிடம் உள்ளது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2015)  ஏற்பட்ட நேபாளத்தில் ஏற்பட்ட கடுமை யான பூகம்பத்தால்,சிகரத்தின் அளவு குறைந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

அதனால், மீண்டு சரியான அளவு எடுக்க அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.