டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு  தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில். கொரோனாவில் இருந்து குணமடைவோர்  அதிகரித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், குணமடைவோர் 95.80% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
 மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 224 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 105 ஆக உயர்வடைந்து உள்ளது. இருந்தாலும் தினசரி பாதிப்பானது 3.22 சதவிகிதமாகவும், வாராந்திர பாதிப்பு 4.17 சதவிகிதமாகவும்  உள்ளது என தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,542 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 07 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்து உள்ளது. இதனால் குணமடைவோர் 95.80% ஆக அதிகரிதுதள்ளது.
நாடு முழுவதும் தற்போதைய நிலையில்,  கொரோனா பாதிப்பு காரணமாக 8,65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 ஆக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,00,458 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,30,987 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்,
இதுவரை மொத்தம் 38,33,06,971 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.