மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், வேகப்பந்து வீச்சை சந்திப்பதற்கு தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளதாய் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்.

‍டெஸ்ட் போட்டிகளில், மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் ஸ்டீவ் ஸ்மித், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அவர் முன்பு, நியூசிலாந்தின் நீல் வாக்னர் போட்ட பவுன்சர்களில் 4 முறை அவுட்டானதால், இந்திய பவுலர்களும் அதே ஆயுதத்தைப் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்மித் கூறியுள்ளதாவது, “நீல் வாக்னர் பயன்படுத்திய உத்தியை வேறு பவுலர்களால் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் இயல்பாக ஆடுவேன். பவுன்சர் குறித்து பயமில்லை.

எனது கிரிக்கெட் அனுபவத்தில், ஷார்ட் பிட்ச் பந்துகளை நிறைய சந்தித்துள்ளேன். அதன்காரணமாக எனக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்பட்டதில்லை. எந்த சவாலையும் எதிர்கொள்ள ஆயத்தமாகவே இருக்கிறேன்” என்றுள்ளார் ஸ்மித்.