துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் பெங்களூரு அணி, 9.3 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 83 ரன்களை அடித்துள்ளது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பெங்களூரை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்துள்ளார். ஆரோன் பின்ச் 27 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுவரை, ஐதராபாத் அணியில் 7 பேர் பந்துவீசி விட்டனர். ஆனாலும் இதுவரை பெங்களூரு அணியின் 1 விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது ‍ஐதராபாத் அணி.

நிலைமை இப்படியே நீடிக்கும் பட்சத்தில், பெங்களூரு அணி 200 ரன்கள் வரை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.